உலகம் விளையாட்டு

விக்கெட் இழப்பின்றி விளையாடிக்கொண்டிருக்கும் இந்திய அணி

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.

முதலில் டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

இந்த நிலையில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்கள் டேகனரின் சந்தர்பால் 12 ரன்களும் , கேப்டன் கிரேக் பிராத்வைட் 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர்கள் இந்திய அணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

ரேமன் ரைபர் 2 ரன்கள் , ஜெர்மைன் பிளாக்வுட் 14 ரன்கள் , ஜோசுவா டா சில்வா 2 ரன்கள் , ஜேசன் ஹோல்டர்18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அனியில் சிறப்பாக விளையாடிய அலிக் அதானாஸ் 47 ரன்கள் எடுத்தார்.

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட் , ஜடேஜா 3 விக்கெட் , ஷார்துல் தாகூர் ,சிராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்சில் விளையாடியது. தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா , அறிமுக வீரர் ஜெய்ஸ்வால் களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தனர்.

தொடர்ந்து நிலைத்து ஆடி பந்துகளை பவுண்டரிக்கு பறக்க விட்டனர்.முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 40 ரன்கள் , ரோகித் சர்மா 30 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், 2-வது நாளான இன்று இந்திய அணி பேட்டிங்கை தொடர்ந்தது. இன்றைய ஆட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 15-வது அரை சதத்தை கேப்டன் ரோகித் ஷர்மா பதிவு செய்தார்.

இந்த் ஆட்டத்தில் 1 விக்கெட் கூட இழக்காமல் ரோகித்-ஜெய்ஸ்வால் ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 142 ரன்கள் சேர்த்தனர்.

தற்போது ஜெய்ஸ்வால் 60 ரன்களுடனும், ரோகித் சர்மா 66 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

(Visited 9 times, 1 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content