இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்தில் இளைஞர் கடத்தி கொலை!!! கிளிநொச்சியில் பதுங்கிருந்த நால்வர் கைது

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் கடத்தி செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நால்வரும் கிளிநொச்சியில் பதுங்கிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ் – வட்டுக்கோட்டை, பொன்னாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தம்பதியரை கடத்திச்சென்றவர்கள் கூர்மையான ஆயுதங்களால் வெட்டி கணவரை கொலை செய்துள்ளனர்.

கணவருடன் ஏற்கனவே கருத்து முரண்பாடு கொண்டிருந்த  சிலர் நேற்றிரவு அவா்கள் பயணித்த மோட்டார் சைக்கிளை  காரில்   பின்தொடர்ந்துள்ளனர்.

இதனையறிந்து, மோட்டார் சைக்கிளை திருப்பி வேறு திசையில் பயணத்தை தொடர்ந்த போதிலும் காரில் பின்தொடர்ந்து வந்தவர்கள் தம்பதியை மோட்டார் சைக்கிளுடன் கடத்திச்சென்று, மனைவியை யாழ்ப்பாணம் சித்தங்கேணியில் இறக்கி விட்டு கணவனை  கூரிய ஆயுதங்களால் தாக்கியதன் பின்ன  கடும் காயங்களுடன் கோட்டைக்காடு வைத்தியசாலைக்கு அருகில் கைவிட்டு விட்டு வென்றுளதாக  பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர் வட்டுக்கோட்டை வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டவா் வட்டுக்கோட்டை, மாவடியை சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான 24 வயதான வா் ஆவாா். இந்த கொலை தொடர்பில் வட்டுக்கோட்டை பகுதியை சோ்ந்த நான்கு சந்தேகநபர்களை   காவல்துறையினா் இன்று கைது செய்துள்ளனர்.

இரண்டு தரப்பினருக்கு இடையிலான தனிப்பட்ட தகராறு காரணமாக கொலை இடம்பெற்றிருக்கலாம் என  தொிவித்துள்ள    காவல்துறையினா்  சந்தேகநபர்கள் நாளை (13) நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளனர் மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை காவல்துறையினா்  முன்னெடுத்து வருகின்றனர்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content