இலங்கையில் வயதான பெண்களை டுபாய்க்கு அனுப்பிய நபருக்கு நேர்ந்த கதி
இலங்கையிலுள்ள பெண்களை சுற்றுலா விசாவில் டுபாய்க்கு அனுப்பும் முகவர் ஒருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு கைது செய்துள்ளது.
சந்தேக நபர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி, ஏமாற்றியுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
கொழும்பு, கோட்டை பகுதியில் நடத்தப்படும் வீட்டுப் பணிப்பெண் சேவைகள் என்ற நிறுவனத்தின் மூலமே பெண்கள் பலர் சுற்றுலா வீசாக்களின் மூலம் தொழில்களுக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
டுபாயில் வீட்டு உதவியாளர் வேலைகளை வழங்குவதாக உறுதியளித்த சந்தேகநபர், 58 முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்களிடம் பணம் வசூலித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சுற்றுலா விசாவில் துபாய்க்கு அனுப்பப்பட்ட பெண் ஒருவர் துபாயில் வேலைவாய்ப்பு கிடைக்காத நிலையில் நாடு திரும்பிய பின்னர் முறைப்பாடு செய்துள்ளார்.
இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது குறித்த நபர் பல மில்லியன் ரூபாய்களை மோசடி செய்ததாக தெரியவந்துள்ளது.





