இலங்கை

இலங்கையில் வயதான பெண்களை டுபாய்க்கு அனுப்பிய நபருக்கு நேர்ந்த கதி

இலங்கையிலுள்ள பெண்களை சுற்றுலா விசாவில் டுபாய்க்கு அனுப்பும் முகவர் ஒருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு கைது செய்துள்ளது.

சந்தேக நபர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி, ஏமாற்றியுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

கொழும்பு, கோட்டை பகுதியில் நடத்தப்படும் வீட்டுப் பணிப்பெண் சேவைகள் என்ற நிறுவனத்தின் மூலமே பெண்கள் பலர் சுற்றுலா வீசாக்களின் மூலம் தொழில்களுக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

டுபாயில் வீட்டு உதவியாளர் வேலைகளை வழங்குவதாக உறுதியளித்த சந்தேகநபர், 58 முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்களிடம் பணம் வசூலித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சுற்றுலா விசாவில் துபாய்க்கு அனுப்பப்பட்ட பெண் ஒருவர் துபாயில் வேலைவாய்ப்பு கிடைக்காத நிலையில் நாடு திரும்பிய பின்னர் முறைப்பாடு செய்துள்ளார்.

இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது குறித்த நபர் பல மில்லியன் ரூபாய்களை மோசடி செய்ததாக தெரியவந்துள்ளது.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்