August 27, 2025
Breaking News
Follow Us
ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் சிறையில் இருந்து விடுதலையானவருக்கு நேர்ந்த கதி

பிரான்ஸில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

Livry-Gargan (Seine-Saint-Denis) நகரில் செவ்வாய்க்கிழமை இரவு இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.

48 வயதுடைய ஒருவரே கொல்லப்பட்டுள்ளார். ஸ்கூட்டர் ஒன்றில் வந்த ஆயுததாரிகள் இருவர் Kalashnikov ரக துப்பாக்கியால் குறித்த நபரை நடுவீதியில் வைத்து சுட்டுள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

மருத்துவ உதவிக்குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்தடையும் முன்னரே குறித்த நபர் உயிரிழந்ததாகவும், நான்கு தடவைகள் அவர் சுடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலியான நபரை பொலிஸார் நன்கு அறிவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மிக சமீபத்திலேயே சிறையில் இருந்து விடுதலையானவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

(Visited 28 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி