ஐரோப்பா

பிரித்தானியா நோக்கி பயணித்த 63 பேருக்கு நேர்ந்த கதி

பிரான்ஸில் இருந்து பிரித்தானியா நோக்கி சட்டவிரோதமாக பயணித்த 63 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இவர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு படகுகளில் அவர்கள் பிரித்தானியா நோக்கி பயணித்துள்ளனர் என தெரியவந்துள்ளது.

கடல் எல்லைகளைப் பாதுகாக்கும் centre régional opérationnel de surveillance et de sauvetage (Cross) மற்றும் Gris-Nez ஆகிய இரு அமைப்புக்களும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்து, கடற்படையினரின் உதவியுடன் அவர்கள் கைது செய்யப்பட்டு கரைக்கு அழைத்துவரப்பட்டனர்.

படகுகளில் ஒன்று அதன் இயந்திரத்தை கடலில் தொலைத்துவிட்டு நகர முடியாமல் தவித்துக்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் அதிகாரிகளால் மீட்கப்பட்டதாகவும், மேலும் சில மீன் பிடி படகுகளையும் அகதிகளை ஏற்றிச் சென்ற நிலையில் கைப்பற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 13 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content