செய்தி தமிழ்நாடு

மாவட்ட ஆட்சியர் வழங்கிய ஊதிய தொகை வழங்கவில்லை

கோவை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக சுமார் 300க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர்கள் அரசாங்கம் கூறிய 721 ரூபாய் ஊதியம் வழங்க வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.

இதனை அடுத்து 3 மாதங்களுக்கு முன் மாவட்ட ஆட்சியர் 721 ரூபாய் வழங்க அறிவுறுத்தியதை அடுத்து அந்தப் போராட்டங்கள் கைவிடப்பட்டன.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அறிவித்த ஊதியம் தற்போது வரை வழங்கப்படவில்லை எனவும்,

எனவே அதனை தங்கள் நிறுவனம் உடனடியாக வழங்க வலியுறுத்தியும் இன்று கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியரிடமும் கோரிக்கையை முன் வைப்பதாக தெரிவித்துள்ளனர்.

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!