வட அமெரிக்கா

காட்டுத் தீ காரணமாக கனடியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

கனடாவில் காட்டுத் தீ காரணமாக கண் நோய்கள் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.பல்வேறு வகையிலான கண் நோய்கள் ஏற்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடாவின் ஒன்றாரியோ, கியூபெக், பிரிட்டிஷ் கொலம்பியா போன்ற பகுதிகளில் தொடர்ச்சியாக காட்டுத் தீ தாக்கம் ஏற்பட்டுள்ளது.

புறச்சூழலில் நடமாடும் போது கண்களில் எரிச்சல் நிலை ஏற்பட்டால் அது குறித்து அதிக அவதானம் செலுத்தப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்டுத் தீ காரணமாக வளி மாசடைவதாகவும் இதனால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசடைதல் காரணமாக அதிக எண்ணிக்கையிலானவர்கள் கண் அழற்சி நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கண்களில் இரசாயனப் பதார்த்தங்கள் படுவதனால் பின்க் ஐ எனப்படும் ஓர் கண் அழற்சி நோய் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

(Visited 14 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்