ஐரோப்பா

பிரான்ஸில் 80 தபாலகங்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

பிரான்ஸில் கடந்த ஒருவாரமாக இடம்பெற்ற வன்முறையில் இதுவரை 150 தபாலகங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவற்றில் 80 நிலையங்கள் திறக்கமுடியாத நிலையில் இருப்பதாக அறிய முடிகிறது.

தபாலங்களுடன் இணைந்துள்ள தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.

அத்துடன் பல தபாலங்கள் எரிக்கப்பட்டும், அடித்து நொருக்கப்பட்டும் சேதமாக்கப்பட்டுள்ளன.

இவற்றில் பெரும்பான்மையாவை இல் து பிரான்ஸிற்குள் உள்ள நிலையங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேதமடைந்த தபாலகங்களில் 80 நிலையங்கள் திறக்கமுடியாத நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 15 மில்லியன் யூரோக்கள் சேதம் ஏற்பட்டதாக கணக்கிடப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!