இந்தியா செய்தி

எரிந்த நிலையில் இருந்த பெண்ணின் சடலத்தை சாப்பிட்ட கொடூரம்

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டம் பண்டாசாஹி கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் பாதி எரிந்த இளம்பெண்ணின் உடலை சாப்பிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களான சுந்தர் மோகன் சிங் (58), நரேந்திர சிங் (25) ஆகியோரை விசாரித்த பிறகு, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 297 (கல்லறையில் அத்துமீறி நுழைந்தது) மற்றும் 34 (பொது நோக்கத்துடன் பல நபர்களின் செயல்கள்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை இறந்த 25 வயதான மதுஸ்மிதா சிங்கின் உடல் தகனம் செய்யப்பட்ட பின்னர், எரியும் தீயில் இருந்து அவரது உடலை எடுத்ததாக தங்களுக்கு புகார் வந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

அதன்படி, மதுபோதையில் இருந்த இரு சந்தேக நபர்களையும் பொலிசார் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மர்மநபர் ஒருவர், இளம்பெண்ணின் உடலை சாப்பிடுவதால் தமக்கு விசேட சக்தி கிடைப்பதாகவும், அதனால் தான் அவ்வாறு செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!