ஐரோப்பா

பிரித்தானியாவில் இளம் பெண்ணுக்கு நடந்த கொடூரம்!-12 வயது சிறுவன் கைது

பிரித்தானியாவில் பதின்பருவ பெண்னை 12 வயது சிறுவன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Kent என்ற இடத்தின் Sittingbourne பகுதியில் பதின்பருவ பெண்ணை 12 வயது சிறுவன் கத்தியால் குத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

வெள்ளிக்கிழமை, Adelaide Drive என்ற இடத்தில் கத்திக்குத்து சம்பவம் நடந்ததாக தகவல் கிடைத்ததையடுத்து அதிகாரிகள் மற்றும் துணை மருத்துவ குழுவினர் அங்கு விரைந்தனர்.சம்பவ இடத்தில் கத்திக் குத்துக் காயங்களுடன் இருந்த teenage பெண்ணை மீட்டு, சிகிச்சைக்காக லண்டன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது அவர் நிலையாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் காயம் ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 12 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணை தொடரும் நிலையில் அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அளிக்கும்படி கென்ட் காவல்துறை சாட்சிகளை கேட்டுக்கொண்டுள்ளது.குறிப்பாக, கத்திக்குத்து நடந்த சமயத்தில் அடிலெய்ட் டிரைவ் பகுதியில் இருந்து கிடைத்த CCTV அல்லது டேஷ் கேம் காட்சிகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!