உலகம் செய்தி

தென் கொரியாவில் பிறப்பு விகிதம் மிகக் குறைந்த அளவை அடைந்தது

தென் கொரியாவில் பிறப்பு விகிதம் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதன்படி தென்கொரியாவின் பிறப்பு விகிதம் 0.72 சதவீதமாக குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2023ல் மட்டும் பிறப்பு விகிதம் 8 சதவீதம் குறைந்துள்ளது.

சியோலில் மட்டும் பிறப்பு விகிதம் 0.55 சதவீதம்.

குழந்தை வளர்ப்பு செலவு அதிகமாக இருப்பதே இதற்கு முக்கிய காரணம்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே குழந்தையை வளர்க்க அதிக செலவு செய்யும் நாடு தென் கொரியா.

பெண்கள் சுதந்திரமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பது அதிகரித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிறப்பு விகிதத்தில் கீழ்நோக்கிய போக்கு தொடர்ந்தால், தென் கொரியாவின் மக்கள்தொகை 2100 இல் 50 சதவீதம் குறையும்.

மேலும் தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் இன்னும் 50 ஆண்டுகளில் தென் கொரியாவில் பணிபுரியும் வயதினரின் எண்ணிக்கை பாதியாக குறையும் என்று கூறப்படுகிறது.

நாட்டின் கட்டாய ராணுவப் பணியில் பங்கேற்கத் தகுதியானவர்களின் எண்ணிக்கையும் 58 சதவீதம் குறையும்.

மேலும், இன்னும் 50 ஆண்டுகளில், நாட்டின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள் என்று சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content