இலங்கைக்கு 350 மில்லியன் டெலர்களை கடனாக வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி!

பொருளாதார நிலைபேற்று வேலைத்திட்டத்துக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட விசேட கடன் வசதியைப் பெற்றுக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த திட்டத்திற்காக ஆசிய ஆபிவிருத்தி வங்கி 350 மில்லியன் டொலர்கள், 1.5 மில்லியன் டொலர்கள் தொழிநுட்ப உதவிகளை கொள்கையை அடிப்படையாகக் கொண்ட விசேட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு வழங்கவுள்ளது.
அதற்கமைய குறித்த கடன் தொகையை பெற்றுக்கொள்வதற்காக தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளருக்கு அதிகாரம் வழங்குவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
(Visited 48 times, 1 visits today)