இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட யானைகளை மீளப் பெற தாய்லாந்து அரசாங்கம் நடவடிக்கை
தாய்லாந்து அரசாங்கத்தால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட இரண்டு யானைகளை மீண்டும் பெறுவது தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
தாய்லாந்து அரசாங்கத்தை மேற்கோள் காட்டி அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதில், இது தொடர்பாக ஒக்டோபர் 28ஆம் திகதி இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யானைகள் இரண்டையும் இலங்கை அரசாங்கம் மோசமாக நடத்துவதாக தெரிவித்தே தாய்லாந்து அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
(Visited 3 times, 3 visits today)





