ஐரோப்பா

21-ம் நூற்றாண்டின் மிக கடுமையான அச்சுறுத்தலாக பயங்கரவாதம் உள்ளது: புடின் எச்சரிக்கை

பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பான 12-வது சர்வதேச கூட்டம் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் நடந்தது.

இதில் ரஷ்ய அதிபர் புடின் வீடியோ கான்பரன்சிங் மூலமாக கலந்து கொண்டு ராணுவத்தினர், அதிகாரிகள் மத்தியில் உரையாற்றினார். அப்போது 21-ம் நூற்றாண்டின் கடுமையான அச்சுறுத்தலாக பயங்கரவாதம் நீடிக்கிறது என்றார்.

இதுதொடர்பில் மேலும் உரையாற்றிய புடின், “நிச்சயமாக, 21-ம் நூற்றாண்டின் மிகக் கடுமையான அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது. இதனை தடுக்கும் வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்” என்றார்.

மேலும் அவர், “உலகின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்களின் நோக்கம், தீவிரவாதக் குழுக்கள் மட்டுமின்றி, சில நாடுகளின் உளவுத் துறையினரும் கூட, அரசியல் சாசன அடித்தளங்களைத் தகர்த்து, இறையாண்மை கொண்ட நாடுகளை சீர்குலைத்து, இனம் மற்றும் மதங்களுக்கு இடையே வெறுப்பைத் தூண்டுகிறது” என தெரிவித்துள்ளார்.

(Visited 17 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்