இலங்கை செய்தி

இலங்கையில் வாகன வருவாய் உரிமம் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தம்!

மேல் மாகாணத்தில் கணனி முறைமை மேம்படுத்தப்படுவதால் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இது குறித்து போக்குவரத்து அமைச்சின் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில்,  வருவாய் உரிமம் வழங்குவது செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 02, 2023 வரை இடைநிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, செப்டம்பர் 26ஆம் திகதி முதல் காலாவதியாக உள்ள வாகன வருவாய் உரிமங்களை அக்டோபர் 10ஆம் திகதி வரை தாமதமான அபராதம் செலுத்தாமல் புதுப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.motortraffic.wp.gov.lk ஊடாக வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை வழங்குவது நேற்று (24.09) நள்ளிரவு முதல் 2023 ஒக்டோபர் 06 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

(Visited 9 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content