இலங்கை

இலங்கையை உலுக்கிய கோர விபத்து! தொழில்நுட்பக் கோளாறா அல்லது சாரதியின் அலட்சியமா? பொலிஸார் தீவிர விசாரணை

பதுளை, துன்ஹிந்த வீதியில் அண்மையில் இடம்பெற்ற பேரூந்து விபத்து, பேருந்தின் தொழிநுட்பக் கோளாறினால் ஏற்பட்டதா அல்லது சாரதியின் பிழையினால் ஏற்பட்டதா என்பது தொடர்பில் இலங்கை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த 34 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் உயிரிழந்த மாணவிகளின் இறுதிக் கிரியைகள் இன்று (03) இடம்பெற்றுள்ளது.

பதுளை – மஹியங்கனை பிரதான வீதியின் துன்ஹிந்த எல்ல பிரதேசத்தில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் இரு மாணவிகள் உயிரிழந்ததுடன், 40 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்து நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன், வேகமாக பேருந்து பயணித்த விதம் கார் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த கெமராவில் பதிவாகியிருந்தது.

பேருந்து தொடர்பில் இரசாயன பகுப்பாய்வு அறிக்கை பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாக பதுளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த தெரிவித்தார்.

விபத்தின் போது பேருந்தின் சாரதி மூன்றாவது அல்லது நான்காவது கியரில் பயணித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இவ்வாறான நிலையில், சுமார் 4 கிலோமீற்றர் செங்குத்தான பகுதியில் பேருந்து வேகமாகச் சென்றதால் வழுக்கி வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மண் மேட்டில் மோதியிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

எவ்வாறாயினும் இயந்திரக் கோளாறா? அல்லது வாகனம் ஓட்டும் போது ஏற்பட்ட பிரச்சினை காரணமாக விபத்து ஏற்பட்டதா? என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

விபத்து நேரிட்ட போது பேருந்து எவ்வாறு இயக்கப்பட்டது என்பதை தொழில்நுட்ப ரீதியாக ஆராய்வதிலும் பொலிஸாரின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, விபத்தில் காயமடைந்த மாணவிகள் உட்பட 40 பேரில் 6 பேர் சிகிச்சை பெற்று பதுளை போதனா வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

7 பேர் தொடர்ந்து மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மருத்துவ குழுக்கள் தொடர்ந்து அவர்களின் நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன.

(Visited 4 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்