அரசியல் இலங்கை செய்தி

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க தமிழ்க் கட்சிகள் போர்க்கொடி!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கப்படுவதற்கு தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஆதரவளிக்காது என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) தெரிவித்தார்.

புதிய அரசமைப்பு உருவாக்கப்படும்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய (Dr. Harini Amarasooriya) நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.

இது தொடர்பில் தயாசிறி ஜயசேகர எம்.பியிடம் நேர்காணலொன்றின்போது கேள்வி எழுப்பட்டது. இதற்கு அவர் வழங்கிய பதில் வருமாறு,

“ நிறைவேற்று அதிகார ஜனாதிபதி (executive presidency) முறைமையை நீக்குவதற்கு சிறுபான்மையினக் கட்சிகள் விரும்பாது. இது தொடர்பில் நான் அக்கட்சிகளுடன் பேச்சு நடத்தியுள்ளேன்.

தமது மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்தவும், பேரம் பேசுவதற்கும் ஜனாதிபதி முறைமை அவசியம் என தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக கட்சிகள் கருதுகின்றன.

எனவே, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்று அமைத்தே இது தொடர்பில் தீர்மானம் எடுக்க நேரிடும்.” – எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என்ற உறுதிமொழியை தேர்தல் விஞ்ஞாபனம் ஊடாக தேசிய மக்கள் சக்தி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!