நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க தமிழ்க் கட்சிகள் போர்க்கொடி!
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கப்படுவதற்கு தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஆதரவளிக்காது என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) தெரிவித்தார்.
புதிய அரசமைப்பு உருவாக்கப்படும்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய (Dr. Harini Amarasooriya) நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.
இது தொடர்பில் தயாசிறி ஜயசேகர எம்.பியிடம் நேர்காணலொன்றின்போது கேள்வி எழுப்பட்டது. இதற்கு அவர் வழங்கிய பதில் வருமாறு,
“ நிறைவேற்று அதிகார ஜனாதிபதி (executive presidency) முறைமையை நீக்குவதற்கு சிறுபான்மையினக் கட்சிகள் விரும்பாது. இது தொடர்பில் நான் அக்கட்சிகளுடன் பேச்சு நடத்தியுள்ளேன்.
தமது மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்தவும், பேரம் பேசுவதற்கும் ஜனாதிபதி முறைமை அவசியம் என தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக கட்சிகள் கருதுகின்றன.
எனவே, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்று அமைத்தே இது தொடர்பில் தீர்மானம் எடுக்க நேரிடும்.” – எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என்ற உறுதிமொழியை தேர்தல் விஞ்ஞாபனம் ஊடாக தேசிய மக்கள் சக்தி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





