ஆழ்கடலில் சிக்கிய படகில் 300 கிலோ ஹெரோயின்!
பேருவளைக்கு அப்பால் ஆழ்கடல் பகுதியில் பலநாள் மீன்பிடிப் படகிலிருந்த 300 கிலோகிராமுக்கும் அதிக ஹெரோயின் போதைப்பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் இன்று (01) காலை மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில் இப் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறித்த படகானது திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன், சோதனைகளின் போது படகிலிருந்த 298 உரப் பைகளில் இப் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. மேலும், அதிலிருந்த 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இப் போதைப்பொருளானது, சுமார் 6000 மில்லியன் ரூபா பெறுமதி […]













