விளையாட்டு

பதிலடி கொடுக்குமா இலங்கை?

  • January 30, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது T – 20 கிரிக்கெட் போட்டி இன்று (30) நடைபெறுகின்றது. கண்டி – பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் Pallegala International Cricket Stadium இலங்கை நேரப்படி இன்றிரவு 7 PM மணிக்கு போட்டி ஆரம்பமாகும். இதற்கு முன் நடைபெற்ற மூன்று ஒருநாள் போட்டிகள் ODI கொண்ட தொடரை இங்கிலாந்து அணி 2–1 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது. அந்த வெற்றியின் ஊக்கத்துடன் இங்கிலாந்து அணி டி20 தொடரிலும் முன்னிலை பெறும் […]

விளையாட்டு

தமிழ் வீரர் அசத்தல்: இலங்கை அணி வெற்றி!

  • January 30, 2026
  • 0 Comments

19 வயதுக்குட்பட்டோருக்கான ஐ.சி.சி. U-19 ICC உலகக்கிண்ண போட்டியில், தென் ஆபிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி ஐந்து விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள தமிழ் வீரரான விக்னேஸ்வரன் ஆகாஷ் தனது சுழல் புயல்மூலம் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியமை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அவரை பலரும் பாராட்டிவருகின்றனர். அவரது பந்து வீச்சு பாணி தொடர்பான காணொளியும் வைரலாகி வருகின்றது. மேற்படி வெற்றியுடன் குழு 1இல் சுப்பர் சிக்ஸஸ் அணிகள் நிலையில் இலங்கை இரண்டாம் […]

இலங்கை செய்தி

சீன உயர்மட்ட குழுவும் கொழும்பு வருகை: பின்னணி என்ன?

  • December 23, 2025
  • 0 Comments

இருநாள் பயணமாக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட தூதுக்குழுவொன்று இன்று (23) இலங்கை வந்தடைந்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குழுவின் செயலாளரும், அக்கட்சியின் 20 ஆவது மத்திய குழு உறுப்பினருமான வாங் ஜுன்செங் தலைமையிலான குழுவே கொழும்பு வந்துள்ளது. அமைச்சர் அநுர கருணாதிலக்க தலைமையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இவர்களுக்குரிய வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது. இதில் இலங்கைக்கான சீனத் தூதுவர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர். விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர் முனையத்தில் அமைச்சருக்கும், சீனத் தூதுக்குழுவின் […]

அரசியல் இலங்கை செய்தி

கொழும்பில் களமிறங்கினார் ஜெய்சங்கர்!

  • December 22, 2025
  • 0 Comments

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இன்று மாலை (22) கொழும்பை வந்தடைந்தார். கட்டுநாயக்க   விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் தலைமையிலான இலங்கை குழுவினர், இந்திய பிரதிநிதிகளை வரவேற்றனர். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நாளை (23) சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு தூதுவராக அவர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நாளை (23) சந்திக்கவுள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கையின் அடிப்படையில் […]

இலங்கை செய்தி

மோடியின் சிறப்பு தூதுவராகவே ஜெய்சங்கர் வருகிறார்: அநுரவுடன் நாளை சந்திப்பு!

  • December 22, 2025
  • 0 Comments

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர்   (22) இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். அவரின் இலங்கை விஜயத்தை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை இன்று (22) வெளியிட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு தூதுவராக அவர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்திக்கவுள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கையின் அடிப்படையில் இவ்விஜயம் இடம்பெறுகின்றது. பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு “ ஒப்பரேஷன் சாகர் பந்து” திட்டம் ஊடாக பல்வேறு உதவிகளை […]

அரசியல் இலங்கை செய்தி

இந்தியாவுடனான 7 ஒப்பந்தங்கள் மறைக்கப்படுவது ஏன்?

  • December 22, 2025
  • 0 Comments

இந்தியாவுடன் கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தங்களை இலங்கை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ இந்திய பிரதமர் மோடி இலங்கை வந்திருந்தவேளை ஏழு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. மேற்படி ஒப்பந்தங்களுக்குள் சுகாதாரத்துறை தொடர்பான ஒப்பந்தமும் உள்ளது. இவற்றை வெளிப்படுத்துமாறு நாம் வலியுறுத்தி வருகின்றோம். எனினும், […]

அரசியல் இலங்கை செய்தி

சர்வதேச விவகாரங்களில் இலங்கைக்கு துணை நிற்கும் சீனா!

  • December 17, 2025
  • 0 Comments

பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களின்போது இலங்கையுடன் நெருக்கமாகச் செயல்படுவதற்கு தயாராக இருப்பதாக சீனா அறிவித்துள்ளது. சீன தேசிய மக்கள் காங்கிரஸின் நிரந்தரக் குழுவின் உப தலைவர் வாங் டோங்மிங் (Wang Dongming) இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். கொழும்பு வந்துள்ள வாங் டோங்மிங்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (17) நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவு, மற்றும் எதிர்காலத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டிய துறைகள் தொடர்பில் இதன்போது விரிவாகக் […]

அரசியல் இலங்கை செய்தி

பொருளாதார மீட்சிக்கு முழு ஆதரவு: அநுரவிடம் சீன தூதுக்குழு உறுதி!

  • December 17, 2025
  • 0 Comments

இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு சீன அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சீன தேசிய மக்கள் காங்கிரஸ்ன் உப தலைவர் வாங் டோங்மிங் உள்ளிட்ட சீனத் தூதுக்குழுவின் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இன்று பேச்சு நடத்தினர். ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போதே மேற்படி உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. “டித்வா சூறாவளியால் ஏற்பட்டுள்ள சவால்களைத் தோற்கடித்து இலங்கை மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். ஜனாதிபதி […]

அரசியல் இலங்கை செய்தி

அவசரகால சட்டம் “அரசியல் ஆயுதமா”?

  • December 17, 2025
  • 0 Comments

அவசரகால சட்டம் அடக்குமுறைக்காக பயன்படுத்தப்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அவசரகால சட்டம் அமுலாகும் விதம் தொடர்பில் எதிரணிகளால் முன்வைக்கப்பட்டுவரும் விமர்சனங்கள் தொடர்பில் அமைச்சரிடம் வினவப்பட்டது. இதற்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். “ பேரிடர் காலகட்டத்தில் அவசர கால சட்டத்தை அமுல்படுத்துவதில் எவ்வித தாமதமும் ஏற்படவில்லை. பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எல்லா விதங்களிலும் உதவும் வகையிலேயே மேற்படி சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அச்சட்டம் எந்த சந்தர்ப்பத்திலும் அடக்குமுறைக்காக பயன்படுத்தப்படவில்லை. அரசியல் நோக்கங்களுக்காக கையாளப்படவும் இல்லை. […]

செய்தி

உலக வங்கியின் மதிப்பீட்டு அறிக்கை வெளியான பின்பு சர்வதேச கொடையாளர் மாநாடு!

  • December 15, 2025
  • 0 Comments

சர்வதேச கொடையாளர் மாநாட்டை நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை அரசாங்கம் செய்துவருகின்றதென அறியமுடிகின்றது. பேரிடர் மீள்கட்டுமானப் பணிகள் மற்றும் மீண்டெழுதல் உள்ளிட்ட விடயங்களுக்காகவே இம்மாநாடு நடத்தப்படவுள்ளது. பேரிடரால் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் அவற்றை மீளமைக்க ஏற்படும் செலவுகள் தொடர்பான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. உலக வங்கி இதற்குரிய ஏற்பாட்டை செய்துவரும் நிலையில், அது தொடர்பான ஆரம்பக்கட்ட அறிக்கையில் விரைவில் வெளியிடவுள்ளது. இந்த மதிப்பீடுகள் நிறைவடைந்த பின்னர், சர்வதேச நாடுகள் பங்கேற்கும் கொடையாளர் மாநாடு நடத்தப்படும் என தெரியவருகின்றது. சர்வதேச கொடையாளர் மாநாட்டை […]

error: Content is protected !!