இலங்கை மீண்டெழ தொடர்கிறது டில்லியின் உதவி: சிறப்பு விமானமும் அனுப்பி வைப்பு!
பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்காக இந்தியா சகல வழிகளிலும் உதவி வருகின்றது. அந்தவகையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிப்பணிகளில் ஈடுபடுவதற்காக, இந்திய விமானப்படையின் எம்ஐ-17 உலங்குவானூர்தி, இன்று முற்பகல் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தை வந்தடைந்தது. சாகர் பந்து நடவடிக்கைக்காக முன்னர் பயன்படுத்தப்பட்ட இரண்டு எம்ஐ-17 உலங்குவானூர்திகள் அத்தியாவசிய பராமரிப்புக்காக இந்தியாவுக்குத் திரும்பிய நிலையில், இந்த உலங்குவானூர்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. இன்று வந்த உலங்குவானுர்தியில் 14 பேர் கொண்ட இந்திய விமானப்படை குழு வந்துள்ளது. […]




