செய்தி

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: சந்தேக நபர்களுக்கு மறியல் நீடிப்பு!

  • February 2, 2026
  • 0 Comments

பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பிக்குகள் மற்றும் மேலும் 6 சந்தேகநபர்களுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. திருகோணமலையில் புத்தர் சிலையொன்றை அகற்றுவதற்கு முற்பட்ட சம்பவத்தின்போது இடம்பெற்ற சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையிலேயே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றில் இன்று (02) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சம்பந்தப்பட்ட தரப்பினர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, குறித்த குழுவினரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 09ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசியல் இலங்கை செய்தி

“வரிசை யுகத்தை முடித்த தலைவரே ரணில்” -ஆதரவாக முன்னாள் எம்.பிக்கள் களத்தில்!

  • January 28, 2026
  • 0 Comments

“ பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்ட தலைவரே ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe . அவருக்கு ஆதரவு தெரிவிக்கவே வந்தேன்.” இவ்வாறு முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர Mahinda Amaraweera தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (28) முன்னிலையானார். அவருக்கு ஆதரவு தெரிவித்து எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நீதிமன்ற வளாகத்துக்கு வந்திருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், கபீர் ஹாசீம், ஹர்ஷ டி சில்வா உள்ளிட்டோரும், […]

இலங்கை செய்தி

நீதிமன்றில் முன்னிலையானார் ரணில்!

  • January 28, 2026
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe இன்று (28) மதியம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் Magistrate’s Court முன்னிலையானார். ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றம் வரும் வழியில் நீதிமன்ற வளாகத்தில் அவரது ஆதரவாளர்கள் கூடி இருந்தனர். அவர்களுக்கு கையசைத்து நன்றி தெரிவித்துவிட்டு தனது சட்டத்தரணிகள் சகிதம் நீதிமன்றம் நோக்கி ரணில் சென்றார். ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், தனது பாரியார் பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்கு அரச நிதியை பயன்படுத்தினார் […]

இலங்கை செய்தி

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் பிணையில் விடுவிப்பு!வெளிநாட்டு பயணத்தடை விதிப்பு!

  • January 9, 2026
  • 0 Comments

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா Douglas Devananda பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்று (09) முற்படுத்தப்பட்டவேளை 20 லட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தால் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டிருந்த துப்பாக்கிகளில் ஒன்று வெலிவேரியா பகுதியில் பாழடைந்த இடமொன்றில் இருந்து மீட்கப்பட்டது. பாதாள குழு உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவலுக்கமையவே துப்பாக்கி மீட்கப்பட்டிருந்தது. எனவே, குறித்த துப்பாக்கி எவ்வாறு பாதாளகுழு வசம் சென்றது […]

இலங்கை செய்தி

கஞ்சாவுடன் சிக்கிய அரசியல்வாதி: யாழில் பரபரப்பு!

  • December 30, 2025
  • 0 Comments

கஞ்சா போதைப்பொருளுடன் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் யாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரணி பகுதியைச் சேர்ந்த நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரே இன்று (30) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 4 கிலோ கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே, சங்கிலியன் பூங்காவுக்கு அருகில் வைத்து அவர் சிக்கியுள்ளார். வெளிநாட்டில் இருந்து வரும் ஒப்பந்தத்துக்கமைய இந்நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணையின்போது பிரதேச […]

error: Content is protected !!