ஐரோப்பா முக்கிய செய்திகள்

புத்தாண்டு தீ விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்க தயாராகும் சுவிஸ்!

கிரான்ஸ்-மொன்டானா  (Crans-Montana) ஸ்கை ரிசார்ட்டில் புத்தாண்டு தினமன்று ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் இழப்பீடாக 50,000 சுவிஸ் பிராங்குகளை  (S$81,660) வழங்குவதாக சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது.

இந்த தீ விபத்தில் 41 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நிதி உதவியை வழங்குவதையும், இரக்கத்தின் அடையாளமாக செயல்படுவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்தின் ஆளும் கூட்டாட்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கூட்டாட்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொள்கையளவில், இந்த இழப்பீடு தனது உயிரை இழந்த ஒவ்வொரு நபருக்கும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் பொருந்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை  இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி கை பர்மெலின் (Guy Parmelin) “உண்மை மற்றும் நீதிக்கான விருப்பத்தை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் கூட்டாட்சி கவுன்சில் பகிர்ந்து கொள்கிறது” என்று கூறியுள்ளார்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!