நேட்டோவில் சேர சுவீடனுக்கு இலையுதிர் காலத்தில் அழைப்புவிடுக்கப்படலாம்!
![](https://iftamil.com/wp-content/uploads/2023/05/nato.webp)
இலையுதிர்காலத்தில் சுவீடன் நேட்டோவில் இணைவதற்கான அழைப்பு விடுக்கப்படாலம், என ஹங்கேரி சமிக்ஞை செய்துள்ளது.
ஹங்கேரியின் ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர், சுவீடனின் முயற்சியை ஆதரிக்கும் துருக்கியின் முடிவு, தேவைப்படும் நேரத்தில் கூட்டணியை வலுப்படுத்துவதற்கான கதவைத் திறந்துவிட்டதாகக் கூறினார்.
Zsolt Nemeth, துருக்கியின் ஒப்புதல் பின்னர் வரும் என்பதால், இந்த முடிவை அங்கீகரிக்க விரைவில் பாராளுமன்றத்தின் அசாதாரண கூட்டத்தை கூட்ட வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹங்கேரியின் பிரதம மந்திரி விக்டர் ஓர்பன் ஒப்புதலை தாமதப்படுத்தினார், ஆனால் அவரது வெளியுறவு மந்திரி இந்த மாத தொடக்கத்தில் துருக்கி தனது எதிர்ப்பை கைவிட்டால், ஹங்கேரியும் தாதமதப்படுத்தாது எனக் கூறினார்.
(Visited 8 times, 1 visits today)