இலங்கை

களுத்துறை மாணவி மரணத்தில் திடீர் திருப்பம்

களுத்துறையில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மூன்றாம் மாடியில் இருந்து நிர்வாணமாக கீழே விழுந்து மரணமடைந்த 16 வயதான மாணவின் மரணம் தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

வயது குறைந்த பெண்பிள்ளையின் அடையாளத்தை உறுதிப்படுத்தாமல் பணத்தை பெற்றுக்கொண்டு அறையை ஒதுக்கிக் கொடுத்தமை தொடர்பில் அந்த விடுதியின் உரிமையாளரின் மனைவி, இன்று (11) கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த விவகாரம் தொடர்பில் இதுவரையிலும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தமாணவி மாடியிலிருந்து விழுந்து கடந்த 6 ஆம் திகதியன்று மரணமடைந்தார்.

சம்பவத்தை விசாரணைக்கு உட்படுத்திவரும் பொலிஸார் 19 வயதான இளைஞன் உட்பட மூவரை முதலாவதாக கைது செய்தனர். பிரதான சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதுவரையிலும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதான சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அந்த யுவதியின் தொலைபேசிக்கு வந்த அழைப்பையடுத்து, பதற்றமடைந்த யுவதி, யன்னலில் இருந்து கீழே பாய்ந்துவிட்டார் என்று தெரிவித்திருந்தார். அதன் உண்மையை கண்டறிவதற்காக, இன்னும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதற்காகவே தடுப்புக்காவல் உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், மரணமடைந்த யுவதியின் தொலைபேசித் தரவுகளை பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தனர்.

(Visited 73 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்