ஆப்பிரிக்கா

முழு அளவிலான உள்நாட்டு போரை எதிர்கொள்ளும் சூடான் – ஐ.நா எச்சரிக்கை!

உள்நாட்டு கலவரங்களால் பாதிக்கப்பட்டுள்ள சூடான் தற்போது முழு அளவிலான போரை எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

குடியிருப்பு பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், ஐ.நா மேற்படி குறிப்பிட்டுள்ளது.

சூடானின் இராணுவ படையினருக்கும், துணை இராணுவ படையினருக்கும் இடையில் நடத்து வருகின்ற மோதலானது மூன்று மாதங்களை கடந்துள்ளது. இருப்பினும் சீற்றம் தீர்ந்தபாடில்லை.

இந்த மோதல் காரணமாக 3000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தப்பிப்பிழைத்தவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்கள் குறித்து பல முறைப்பாடுகளை அளித்துள்ளனர்.

மேலும் டார்ஃபுர் பகுதியில் மனித குலத்திற்கு எதிரான சாத்தியமான குற்றங்கள் குறித்து ஐ.நா எச்சரித்துள்ளது.

சூடானில் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறுவது முழு அளவிலான போருக்கு வித்திட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 13 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆப்பிரிக்கா

வடக்கு காங்கோவில் 22 பேரை கடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர்!

வடக்கு காங்கோவில் உள்ள கிராமமொன்றில் இருந்து குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்-யூலே மாகாணத்தில் உள்ள அங்கோ பிரதேசத்தில் உள்ள நகரங்களை வெள்ளை இராணுவ
ஆப்பிரிக்கா

புர்கினோ பசோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

புர்கினோ பசோவின் சில பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிஹாதிகளுக்கு எதிராக போராடுவதற்கும், ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் இந்த ஊரடங்கு