இலங்கை

போராட்டம் தொடரும் : இலங்கை சுகாதார தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் 10 வைத்தியசாலைகளில் நாளை அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சுகாதார தொழிற்சங்கங்கள் கூட்டணியின் அழைப்பாளர் ரவி குமுதேஷ் இன்று (01.04) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போது மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,  காலை 6.30 மணிக்கு ஆரம்பிக்கும் பணிப்புறக்கணிப்பு 4 மணித்தியாலங்களுக்கு தொடரும் என அறிவித்துள்ளார்.

அதன்படி நாளை வேலைநிறுத்தம் அமுல்படுத்தப்படும் வைத்தியசாலைகள் வருமாறு,

இலங்கை தேசிய வைத்தியசாலை

கராபிட்டிய போதனா வைத்தியசாலை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை

பேராதனை போதனா வைத்தியசாலை

திருகோணமலை போதனா வைத்தியசாலை

கேகாலை பொது வைத்தியசாலை

பொலன்னறுவை பொது வைத்தியசாலை

மன்னார் ஆதார வைத்தியசாலை

கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலை ஆகியவற்றில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!