டேவ் புயல் எதிரொலி – ஸ்கொட்லாந்தில் பனிப்பொழிவிற்கு வாய்ப்பு!
‘டேவ் புயல் தொடர்ந்து வலுப்பெறுவதால்’, பிரித்தானிய மக்கள் கடும் பனிப்பொழிவு, சூறாவளிக் காற்று மற்றும் பரவலான மின்வெட்டுகளை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் வடக்கு இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளுக்கு காற்றுக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்ப்டுள்ளது.
பறக்கும் சிதறல்கள் ‘காயங்களை’ ஏற்படுத்தக்கூடும் அல்லது ‘உயிருக்கு ஆபத்தை’ விளைவிக்கக்கூடும் என்பதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வானிலை முன்னறிவிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை டேவ் புயலால் ஸ்காட்லாந்தின் சில பகுதிகளுக்கு 30 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு பெய்யக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பில், ‘டேவ் புயல் வடகிழக்கு நோக்கி நகரும்போது தொடர்ந்து வலுப்பெறும்’ என்று கூறப்பட்டுள்ளது.





