இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கை அரசியல்வாதிகள் பின்னால் சுற்றி திரியும் அரச புலனாய்வு அதிகாரிகள்

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் எதிர்க்கட்சியில் இணைகிறார்களா என்பதை ஆராய்வதற்காக அரச புலனாய்வு அதிகாரிகள் இந்த நாட்களில் பாராளுமன்ற உறுப்பினர்களை பின்தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த அமைச்சர்கள் குழுவொன்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைவதற்கு எடுத்த தீர்மானங்கள் உள்ளதாக கூறப்படுகின்றது.

அவர்களில் யார் இணைகிறார்கள் என்பது குறித்து ஆராய்வதற்காக அவ்வப்போது புலனாய்வு அதிகாரிகள் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களை பின்தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

கட்சி மாறுவார்கள் என்று நினைக்காத பொதுஜன பெரமுன அரசியல்வாதிகள் பலர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவதற்கான இரகசியப் பேச்சுக்களை நடத்தி வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையும் இவ்வாறான அரசியல்வாதிகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவருக்கு நெருக்கமான சிலருடன் மாத்திரம் கருத்துப் பரிமாற்றம் செய்வதால் புலனாய்வு அதிகாரிகள் உறுப்பினர் பின்னால் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

(Visited 15 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!