ஸ்டாமர் மலிவான அரசியலை செய்கிறார் – கடும் ஆதங்கத்தை வெளிப்படுத்திய பசுமைக் கட்சி
மலிவான அரசியல் அவதூறு கருத்துக்களை பிரதமர் Starmer வெளியிடுவதாக பசுமைக் கட்சி தலைவர் போலன்ஸ்கி(Zac Polonsky) குற்றம் சுமத்தியுள்ளார்.
மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் பிரதமர் பசுமைக் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.
பசுமைக் கட்சி ஆட்சிக்கு வந்தால் “ஐரோப்பா முழுவதும் விளக்குகள் மீண்டும் அணைந்துவிடும்” என அவர் கூறினார்.
இவ்வாறான கருத்துகள் குறித்து அதிருப்தி வெளியிட்ட பசுமைக் கட்சி தலைவர் தேசிய பாதுகாப்பையும், நேட்டோ உறுதியையும் மிகவும் தீவிரமாக
எடுத்துக்கொள்கிறோம் என்பதையும் வலியுறுத்தினார்.
“ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் அனைவரின் மீதான தாக்குதல்” என்று கூறிய அவர், “நாங்கள் நேட்டோவில் உறுதி கையெழுத்திடுவோம்”
என்றும் தெரிவித்தார்.
பிரதமர் சைபர் பாதுகாப்பு, தொற்றுநோய் எதிர்ப்பு மற்றும் காலநிலை நெருக்கடியை போக்க
அரசாங்கம் போதுமான முதலீடு செய்யவில்லை என்றும் குற்றம் சுமத்தினார்.





