இலங்கை

இலங்கையின் கடன் வழங்கும் நாடுகளின் குழு நிவாரணம் வழங்கலாம் : ஜப்பான் வெளியிட்ட அறிவிப்பு!

இலங்கையின் கடன் வழங்கும் நாடுகளின் குழு இலங்கைக்கு கடன் நிவாரணம் வழங்கலாம் என ஜப்பானின் “ஜிஜி” செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

மேலும் கடனை செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவிற்கு ஜப்பான், பிரான்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து தலைமை வகிக்கின்றன.

இலங்கையின் மிகப் பெரிய வெளிநாட்டுக் கடனாளியான சீனாவும் இந்தக் குழுவில் இணைவதற்கு வழி வகுத்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

$4.2 பில்லியன் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக சீனாவின் எக்சிம் வங்கியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு கடன் வழங்கும் நாடுகளின் குழுவுடன் ஒப்பந்தம் எட்டப்பட்டது.

இந்த சமீபத்திய சூழ்நிலையில், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை இரண்டாவது கடன் தவணையை (330 மில்லியன்) பெற்றுக்கொள்ள முடியும் என்று கருதப்படுகிறது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!