இலங்கை

இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

இலங்கையர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில இடங்களிலும் இன்று வெப்பச் சுட்டெண் கணிசமான மட்டத்தில் அதிகரிக்கக்கூடுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருப்பதாலும், நடவடிக்கைகளில் ஈடுபடுவதாலும் சோர்வு ஏற்படக்கூடும் என திணைக்களம் தெரிவிக்கின்றது.

நீரிழப்பு மற்றும் உமிழ்நீர் இழப்பு காரணமாக, தசைப்பிடிப்பு போன்ற நிலைமைகளும் ஏற்படலாம், அதற்கேற்ப, போதுமான அளவு தண்ணீர் அருந்துவதுடன், நிழலான இடங்களில் இருக்குமாறும் அந்தத் திணைக்களம் மக்களை அறிவுறுத்துகிறது.

வீடுகளில் உள்ள முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும், வாகனங்களில் குழந்தைகளை தனிமையில் அமர வைக்க வேண்டாம் எனவும் கோரப்பட்டுள்ளது.

நிலவும் வெப்பத்தை கருத்திற்கொண்டு, மக்கள் கடினமான நடவடிக்கைகளை மட்டுப்படுத்தி வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை பயன்படுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம், மொனராகலை மாவட்டத்தில், 35.4 பாகை செல்ஸியஸ் என்ற அளவில், அதியுச்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில், 11.2 பாகை செல்ஸியஸ் என்ற அளவில் குறைந்தப்பட்ச வெப்பநிலை பதிவானதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!