செய்தி

கனடாவில் கொல்லப்பட்ட இலங்கையர்கள் – சந்தேக நபர் தொடர்பில் மேலும் பல தகவல் வெளியானது

கனடாவில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்களான டிலந்திகா ஏகநாயக்க மற்றும் காமினி அமரகோன் ஆகியோரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் சிலரை இறுதிச் சடங்குகளுக்காக கனடாவுக்கு அழைத்துவருவது தொடர்பில் கனடாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே விசாரணை முடிந்த பின்னர், உயிரிழந்த 6 பேரின் இறுதிக் கிரியை அவர்களின் உறவினர்களின் விருப்பப்படி மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, கனடாவின் ஒட்டாவாவில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர் தொடர்பில் இதுவரை பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

2 வருடங்களுக்கு முன்னர் கனடாவிற்கு சென்ற சந்தேக நபர் ஒரு மாதத்தின் பின்னர் தமது குடும்பத்துடனான தொடர்புகளை துண்டித்துள்ளதாக அவரது உறவினர் ஒருவர் சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

கனடா, ஒட்டாவா, பஹவன் பகுதியில் வசித்துவந்த இலங்கையர்கள் குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் நான்கு பிள்ளைகள் உட்பட ஆறு பேர் கடந்த 6 ஆம் திகதி இரவு கொலை செய்யப்பட்டனர்.

சம்பவத்தில் பலியான பிள்ளைகளின் தந்தையான தனுஷ்க மதுரங்க பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொலையாளி என கருதப்படும் பெப்ரியோ டி சொய்சா என்ற 19 வயது மாணவனுக்கும் சம்பவத்தில் உயிரிழந்த 40 வயதுடைய காமினி அமரகோனுக்கும் தனுஷ்க மதுரங்க தமது வீட்டில் அறைகளை வாடகைக்கு வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், தனுஷ்க மதுரங்கவும் வாடகை அடிப்படையிலேயே குறித்த வீட்டைப் பெற்றுள்ளார்.

எவ்வாறாயினும், அந்த வீட்டில் தமது குடும்ப உறுப்பினர்களைத் தவிர வேறு நபர்கள் இருப்பதாக அவர் வீட்டு உரிமையாளரிடம் சட்டப்பூர்வமாக அறிவித்திருக்கவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, உயிரிழந்த தனுஷ்க விக்ரமசிங்கவின் குடும்பத்துக்காக உதவ கனேடிய பௌத்த பேரவையும் ஒரு உதவித் திட்டத்தை அறிவித்துள்ளது.

இதுவரை 40 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் அந்த திட்டத்துக்காக கிடைத்துள்ளதாக கனேடிய பௌத்த பேரவை குறிப்பிட்டுள்ளது.

(Visited 17 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content