மேற்கு ஆசிய போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு இலங்கை அரசாங்கம் வரவேற்பு
மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் தற்காலிக போர்நிறுத்தத்தை பிரகடனப்படுத்துவது மற்றும் அது தொடர்பில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகள் குறித்து இலங்கை அரசாங்கம் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது.
பிராந்திய பதற்றத்தைத் தணிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்க்கமான நடவடிக்கை இதுவென வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
நிரந்தரமானதொரு தீர்வை எட்டுவதற்கு இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துமாறு அனைத்துத் தரப்பினரிடமும் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பிராந்தியத்திலுள்ள அனைத்து சமூகங்களினதும் நீண்டகால ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்காக அமைதிச் செயல்முறையின் முக்கியத்துவத்தை இலங்கை வலியுறுத்தியுள்ளது.
இந்த போர்நிறுத்தத்திற்காக இராஜதந்திர ரீதியாகத் தலையீடு செய்த தரப்பினரின் பங்களிப்பு மற்றும் முயற்சிகளையும் இலங்கை அரசாங்கம் பாராட்டியுள்ளது.





