இலங்கை

அரைமில்லியன் சீன சுற்றுலா பயணிகளை இலக்குவைக்கும் இலங்கை!

இலங்கை கடன்நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்காக சீனாவை சேர்ந்த அரைமில்லியன்  சுற்றுலாப்பயணிகளை இலங்கைக்கு வரச்செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன்பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

இது கொவிட்டிற்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சீன சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை விட இரண்டுமடங்கு அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனா சுற்றுலாப்பயணி ஒருவர் 5000 டொலர் செலவு செய்தாலும் அது சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து சமீபத்தில் கிடைத்த நிதி உதவிக்கு சமன் என ஹரீன்பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறையால் இலங்கையை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீட்கமுடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள அவர்,  நவம்பர் மாதம் வரை சீனாவிலிருந்து இலவச சுற்றுலா விசாவை வழங்கும் திட்டமொன்றை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாகவும் கூறினார்.

இலங்கைக்கான விமானசேவைகளை அதிகரிப்பது தொடர்பில் சீன விமானசேவைகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!