இலங்கை

இலங்கை தொடருந்து நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பால் இரவு நேர அஞ்சல் தொடருந்து சேவை ரத்து

தொடருந்து நிலைய அதிபர்களால் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு காரணமாக, இன்று இரவு நேர அஞ்சல் தொடருந்துகள் இயங்காது என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக 250 முதல் 270 வரையிலான தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தொடருந்து பயணச்சீட்டுக்கள் வழங்கப்படாததால் தொடருந்து திணைக்களத்திற்கு சுமார் 3 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

பணியமர்த்தல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குமாறு கோரி தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளது.

(Visited 5 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்