இலங்கை – மூத்த இராணுவ அதிகாரிகளைச் சந்தித்து பாதுகாப்பு நிலைமை குறித்து ஆலோசனை நடத்திய ஜனாதிபதி

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்த கலந்துரையாடல் இன்று (25) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
இலங்கை இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், இலங்கையின் பாதுகாப்பு நிலைமை தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு துணை அமைச்சர் அருண ஜெயசேகர, ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகோந்தா மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ மற்றும் இலங்கை இராணுவத்தின் பல மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டதாக அது தெரிவித்துள்ளது.
(Visited 2 times, 2 visits today)