இலங்கை

இலங்கை – மூதூர் களப்பில் இருந்து மீனவரொருவரின் சடலம் மீட்பு

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைச்சேனை களப்புப் பகுதியில் நீரில் மூழ்கிய நிலையில் மீனவரொருவரின் சடலம் புதன்கிழமை (30) அன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மூதூர் -பாலநகர் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சேகு முகம்மது றம்சூன் (வயது 45) என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் இன்று அதிகாலை களப்புக் கடலுக்கு மீன்பிடிப்பதற்காக சென்றுள்ள நிலையில் களப்புப் பகுதியில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். மீன்பிடிப்பதற்காக சென்ற மற்றொரு மீனவரொருவர் நீரில் மிதந்த நிலையில் சடலமொன்று கிடப்பதை கண்டு மூதூர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

அதன் பின்னர் மூதூர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.குறித்த மீனவரின் உயிரிழப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

சம்பவ இடத்திற்கு மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் வருகை தந்து சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

(Visited 1 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
Skip to content