தெஹ்ரானில் தூதரகத்தை மீள திறக்கிறது ஸ்பெயின்!
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள தமது நாட்டு தூதரகத்தை மீண்டும் திறக்க ஸ்பெயின் அரசு முடிவு செய்துள்ளது.
ஸ்பெயின் வெளிவிவகார அமைச்சர் Jose Manuel Alvarez ,தமது நாட்டு தூதுவரை ஈரான் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
சர்வதேச அமைதியை நிலைநாட்ட அனைத்து முனைகளிலும் செயல்பட வேண்டும் என்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.
இதன் மூலம் ஈரானிய தலைநகரிலிருந்தே அமைதி பேச்சுவார்த்தைகளில் நேரடியாகப் பங்கேற்க ஸ்பெயின் திட்டமிட்டுள்ளது.
ஈரான்மீதான ராணுவ நடவடிக்கைக்கு தனது வான்பரப்பை பயன்படுத்துவதற்கு ஸ்பெயின் அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





