உலகம் ஐரோப்பா

சேர்பியாவில் துப்பாக்கிச்சூடு : 8 பேர் பலி!

சேர்பியாவில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன்,  14 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஓடிக்கொண்டிருந்த காரிலிருந்து இளைஞர் ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மிலாடேனோவாக் நகருக்கு அருகிலுள்ள 3 கிராமங்களில் இச்சம்பவம் இடம்பெற்றள்ளது என அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இரவு முழுவதும் நடந்த தேடுதலையடுத்து, 21 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என சேர்பிய அதிகாரிகள் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.

சேர்பியாவில் இரு நாட்களில் நடந்த இத்தகைய இரண்டாவது சம்பவம் இதுவாகும்.

தலைநகர் பெல்கிரேட்டில்  ‍ பாடசாலை ஒன்றில், கடந்த புதன்கிழமை 14  வயது பாடசாலை மாணவன் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 8 மாணவர்களும்  பாதுகாப்பு உத்தியோக்தர் ஒருவரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்