ஐரோப்பா

ஜெருசலேமில் உள்ள சோதனை சாவடியில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி!

ஜெருசலேம் மற்றும் மேற்குக்கரை நகரமான பெத்லஹேமுக்கு இடையே உள்ள ஒரு சோதனைச் சாவடியில் மூன்று பாலஸ்தீனியர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இஸ்ரேலிய சிப்பாய் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் இந்த தாக்குதல்களால் பலர் காயமடைந்ததாகவும் இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி ஏந்தியவர்கள் மிகப் பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாக காவல்துறைத் தலைவர் யாகோவ் ஷப்தாய் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு, சந்தேகநபர்களுடைய வாகனத்தில் இருந்து இரண்டு தானியங்கி துப்பாக்கிகள், இரண்டு கைத்துப்பாக்கிகள், நூற்றுக்கணக்கான தோட்டாக்கள்,  மற்றும் இரண்டு கோடரிகள் ஆகியவற்றைக் கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்

 

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்