இந்தியா

அதிர்ச்சி சம்பவம்!! குடி போதையில் 2 வயது குழந்தையை தரையில் அடித்து கொன்ற தந்தை

இந்திய மாநிலம், உத்தர பிரதேசத்தில் மதுபோதையில் 2 வயது குழந்தையை தரையில் அடித்துக் கொன்ற சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், சம்பல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஷ்ரஃப் என்பவருக்கும், சைஸ்தா என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.இதில், 2 குழந்தைகளுக்கு தாயான சைஸ்தாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளது. இவர்கள் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

இதில் அஷ்ரஃப் மதுபோதைக்கு அடிமையாகி அடிக்கடி சைஸ்தாவையும், 2 குழந்தைகளையும் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.இந்நிலையில், நேற்று மதுபோதையில் இருந்த அஷ்ரஃப் தகராறு செய்துள்ளார். அப்போது, மனைவியையும், 2 குழந்தைகளையும் அடித்து துன்புறுத்தியுள்ளார்.

இதில், மனைவியையும், ஒரு குழந்தையையும் கடுமையாக தாக்கியது மட்டுமல்லாமல், 2 வயது குழந்தையை தரையில் பல முறை அடித்துள்ளார். இவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது 2 குழந்தைகளும் மயங்கி கிடந்துள்ளனர்.

அவர்களை, உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதில், 2 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. மற்றொரு குழந்தை உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது.இதற்கு காரணமான அஷ்ரஃபை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 6 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content