இலங்கை

இலங்கையில் அதிர்ச்சி – மகளை தாக்கி விசம் கொடுத்த தந்தை

மஸ்கெலியா – மொக்கா தோட்டத்தில் தனது மகளை தாக்கி, விசம் கொடுத்ததற்காக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபர் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரின் மூன்று பெண் பிள்ளைகள் பாதுகாப்பு நிமித்தம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தாக்குதலுக்கு உள்ளான அவரின் மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, சந்தேகநபர் கடந்த 03 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான 20 வயதான யுவதி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அவர் பல நாட்களாக பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து யுவதியின் தந்தை மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.

யுவதியின் தாய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தந்தையின் பாதுகாப்பில் மூன்று குழந்தைகளையும் விட்டு விட்டு வௌிநாடு சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

(Visited 12 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!