இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கையில் அதிர்ச்சி – மகனை அடித்துக் கொலை செய்த தந்தை

இந்துருவ, அட்டவலவத்த சுனாமி கிராமத்தில் தந்தையால் மகன் கொலைசெய்யப்பட்டுள்ளதாக கொஸ்கொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்துருவ, அட்டவலவத்த பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய கசுன் குமார என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீட்டில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே நீண்ட நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, தந்தை சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து மகனின் கழுத்தை அறுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இதனையடுத்து ஆபத்தான நிலையில் இருந்த மகனை பலப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும்போது அவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது 65 வயதுடைய சந்தேக நபரான தந்தை விசாரணைக்காக கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

(Visited 21 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்