ஆசியா

ஜப்பானின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற ஷிகெரு இஷிபா

ஜப்பான் நாட்டின் பிரதமராக 67 வயது ஷிகெரு இஷிபா செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 1) பொறுப்பேற்றார்.அவர் தலைமையிலான அரசாங்கம் ஜப்பான் மக்களின் நம்பிக்கையை மீண்டும் முழுமையாக பெற நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவால் ஏற்படும் ராணுவ அச்சுறுத்தல், பொருளாதார மந்தம் உள்ளிட்ட பல பிரச்சினைகளையும் இஷிபா சமாளிக்க வேண்டும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான இஷிபா, ஜப்பான் நாடாளுமன்றத்தை கலைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் விரைவில் பொதுத் தேர்தல் நடத்த எண்ணம் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆளும் மிதவாத ஜனநாயகக் கட்சியின் தலைவராக உள்ள இஷிபாவுக்கு செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைத்தது. அதைத் தொடர்ந்து அவர் பிரதமரானார்.

அதைத்தொடர்ந்து, இஷிபா அவரது அமைச்சரவையை அறிவித்தார். அதில் 19 அமைச்சர்கள் இடம்பெற்றிருந்தனர். அவர்களில் இருவர் பெண்கள்.முன்னாள் அமைச்சரவை தலைவர் கட்சுனோபு கட்டோ நிதியமைச்சராக அறிவிக்கப்பட்டார். ஜென் நக்கடானிக்கு பாதுகாப்பு அமைச்சு வழங்கப்பட்டது.வெளியுறவு அமைச்சு டக்கேசிக்கு கொடுக்கப்பட்டது. அவர் இஷிபாவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று ஜப்பானிய ஊடகங்கள் கூறுகின்றன.

பிரதமர் இஷிபா இதற்கு முன்னர் மூன்று முறை அமைச்சராக செயல்பட்டுள்ளார்.ஆளும் மிதவாத ஜனநாயகக் கட்சியின் தலைவருக்கான போட்டியில் இஷிபா நான்கு முறை தோற்றார். இறுதியில் ஐந்தாவது முறையாக போட்டியிட்டு கட்சியின் தலைவராகி நாட்டின் பிரதமரானார்.

இந்நிலையில், ஜப்பான் பங்குச் சந்தை வீழ்ச்சி கண்டுள்ளது. இஷிபா பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற செய்தி வெளியான முதல் பங்குசந்தையில் புள்ளிகள் சரிந்தன.திங்கட்கிழமை 5 சதவீதம் புள்ளிகள் சரிந்தன. இருப்பினும் அது செவ்வாய்க்கிழமை சற்று மீண்டுவந்தது.

இஷிபா ஜப்பானின் நிதி சார்ந்த கொள்கைகளில் அதிக கவனம் செலுத்துவார் என்று கூறப்படுகிறது. மேலும், அவர் வரிகள் தொடர்பாக புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

(Visited 3 times, 3 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content