கொழும்பு ஹோட்டலில் இரகசியக்கூட்டம் – ஒன்று கூடிய ரணில், நாமல் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள்
கொழும்பில் உள்ள தனியார் ஹோட்டலில் எதிர்க்கட்சி தலைவர்களின் சந்திப்பும் இரவு உணவு விருந்து ஒன்றும் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொண்டமை பலரது அவதானத்திற்குள்ளாகியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தனவின் அழைப்பின் பேரில் 25க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச மற்றும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியோர் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து தங்கள் நிலைப்பாட்டை இந்தக் கூட்டத்தில் விளக்கியுள்ளனர்.
கூட்டு எதிர்க்கட்சியின் தலைமையில் கொழும்பில் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்துவது குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
எதிர்காலத்தில் எதிர்க்கட்சியாக இணைந்து எடுக்க வேண்டிய பல முக்கிய நடவடிக்கைகள் குறித்து கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அங்கு முன்வைக்கப்பட்ட கிட்டத்தட்ட அனைத்து திட்டங்களுடனும் உடன்பட்டுள்ளார்.
மேலும் இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாகவும் முக்கியமானதாகவும் இருந்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.





