உக்ரைன் படுகொலை திட்டத்தை தடுத்து நிறுத்திய ரஷ்யா

ரஷியன் ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸ், ரஷியன் டுடே செய்திச் சேவையின் தலைமை ஆசிரியரான பத்திரிக்கையாளர் மார்கரிட்டா சிமோனியனைக் கொல்லும் உக்ரேனிய உளவுத்துறையின் திட்டத்தை வெற்றிகரமாகத் தடுத்ததாக அறிவித்துள்ளது.
பத்திரிக்கையாளர்களான மார்கரிட்டா சிமோனியன் மற்றும் செனியா சோப்செக் ஆகியோரைக் கொல்ல உக்ரைன் உளவுத்துறை திட்டம் தீட்டியதாகவும், ரஷ்ய பெடரல் செக்யூரிட்டி சர்வீஸ் அதை வெற்றிகரமாகத் தடுத்ததாகவும் பாதுகாப்புச் சேவை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மொஸ்கோவில் ஊடகவியலாளர்களை உளவு பார்த்த உக்ரைன் தேசியவாதிகள் பலர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(Visited 13 times, 1 visits today)