ஐரோப்பா

உக்ரைனின் உள்கட்டமைப்பை குறிவைத்து தாக்கிய ரஷ்யா : இருவர் பலி!

உக்ரைனின் மேற்கு லிவிவ் பிராந்தியத்தில் உள்கட்டமைப்பு மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஏவுகணை தாக்குதலால் கட்டடம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததாக ஆளுநர் ஓலே சினிஹுபோவ் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்தில் நூறாயிரக்கணக்கான மக்கள் ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் இல்லாமல் தவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன்படி 170,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதேவேளை ரஷ்யாவினால் ஏவப்பட்ட 11 ஷாஹெட் வகை ஆளில்லா விமானங்களில் ஒன்பதையும், 14 குரூஸ் ஏவுகணைகளில் ஒன்பதையும் ஒரே இரவில் சுட்டு வீழ்த்தியதாக உக்ரேனிய விமானப்படை தெரிவித்துள்ளது.

சமீபத்திய நாட்களில் உக்ரேனிய எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 16 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்