இலங்கை செய்தி

தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான கட்டணத்தில் திருத்தம்

தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு அறவிடப்படும் கட்டணத்தை திருத்தியமைத்து பொது பாதுகாப்பு அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இதன்படி, தேசிய அடையாள அட்டையின் சான்றளிக்கப்பட்ட பிரதிக்கான கட்டணம் 2,000 ரூபாவாக இருக்க வேண்டும் என வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, தேசிய அடையாள அட்டைகளின் நம்பகத்தன்மையை சான்றளிப்பதற்கான கட்டணம் ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்கும் பட்சத்தில் 25 ரூபாவாகவும், பௌதீக ஆவணங்கள் மூலமாகவோ அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடிய மின்னணு முறையில் சமர்ப்பிக்கும் பட்சத்தில் 500 ரூபாவும் அறிவிடப்படவுள்ளது.

தேசிய அடையாள அட்டை புகைப்படக் கலைஞராக பதிவு செய்வதற்கான கட்டணம் 15,000 ரூபாயாக இருக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன் இந்த கட்டணம் 10,000 ரூபாயாக இருந்தது.

இதேவேளை, பதிவுச் சான்றிதழைப் புதுப்பிப்பதற்கான வருடாந்தக் கட்டணமான 2,000 ரூபாவை 3,000 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

(Visited 16 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை