இலங்கை செய்தி

மைத்திரியை விட ரணில் ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமானவர்!! சுரேன் ராகவன்

மைத்திரியை விட ஜனாதிபதி ரணில் பொருத்தமானவர் என இராஜாங்க அமைச்சர் ராகவன் கூறுகிறார்

அடுத்த ஜனாதிபதி பதவிக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அல்ல தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே பொருத்தமானவர் என இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன், கொழும்பு ஊடகம் ஒன்றிடம் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அடுத்த ஜனாதிபதி பதவிக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோரில் யார் பொருத்தமானவர்கள் என அவரிடம் கேள்வியொன்று முன்வைக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர், நாடு நெருக்கடியான நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே தலைமைப் பொறுப்பை ஏற்று செயற்பட்டமையினால் அவர் அடுத்த 5 வருடங்களுக்கு ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமானவர் எனத் தெரிவித்தார்.

(Visited 7 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content