மாகாணசபைத் தேர்தல்: பிரதி அமைச்சர் வழங்கியுள்ள உறுதிமொழி!
மாகாணசபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் Sundaralingam Pradeep தெரிவித்தார்.
தேர்தலை இழுத்தடிப்பு செய்யும் எந்தவொரு நோக்கமும் அரசாங்கத்துக்கு இல்லை எனவும், சட்டரீதியிலான ஏற்பாடுகள் முடிந்த பின்னர் அது நடக்கும் எனவும் அவர் கூறினார்.
மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு எதிரணிகள் அரசாங்கத்துக்கு சவால் விடுத்துவருகின்றன.
மக்கள் மத்தியில் தமக்குரிய செல்வாக்கு சரிந்துள்ளதால் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் அஞ்சுகின்றது எனவும் எதிரணிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
இந்நிலையிலேயே பிரதி அமைச்சர் Sundaralingam Pradeep மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.





