இலங்கை

மின் கட்டண திருத்தத்திற்கான உத்தேச கட்டண விகிதங்கள் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு!

மின் கட்டண திருத்தம் எதிர்வரும் ஜுலை மாதத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், அதற்கான உத்தேச விகிதங்களை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

தற்போதைய மின் கட்டணத் திருத்தத்தின்படி, உள்நாட்டுப் பிரிவில் முதல் 30 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட் மின்சாரத்துக்கு வசூலிக்கப்படும் கட்டணம்  05 ரூபாயாகும்.   அந்த வகையில் ஒரு மின்சார யூனிட்டுக்கான புதிய கட்டணம் 25 ரூபாயாகும்.

இதற்கிடையில், நுகரப்படும் முதல் 30 யூனிட்டுகளுக்கான நிலையான கட்டணம்  250 ரூபாவாகும். இந்த வகைக்கான தற்போதைய நிலையான கட்டணம் 400 ரூபாவாகும்.

முதலாம் பிரிவினருக்கு குறைந்தபட்சம் 23% நிவாரணம் வழங்கப்படும் என சுட்டிக்காட்டிய அமைச்சர் விஜேசேகர, மொத்தமாக 1,744,000 குடும்பங்கள் உரிய பலனைப் பெற்றுக்கொடுக்க உள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும், 31-60க்கு இடைப்பட்ட யூனிட்களுக்கு விதிக்கப்படும் கட்டணம் 9% குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் 0-60 யூனிட்டுகளுக்கு கட்டணம்  7% ஆக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஹோட்டல் வகைக்கு 29% – 40% மின் கட்டண திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!